ஜனவரி மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை
1. விரைவில்..! உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தும் தொலைபேசி
மறுபக்கத்தில் உரையாடலில் ஈடுபட்டுள்ளவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தி, அவருடன் நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலைபேசியை எதிர்வரும் வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்த போலந்து கம்பனியொன்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
1977ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்படத்தின் கதாநாயகியை குறிக்கும் வகையில் மேற்படி கம்பனிக்கு யெலிஸா டிஸ்பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிறுவனமானது முப்பரிமாண விம்ப உபகரணங்களை வெற்றிகரமாக
ஸ்தாபித்ததையடுத்து, அந்த தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மாதிரி
தொலைபேசியை எதிர்வரும் வருடத்துக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.
2. இணையத்தளத்துடன் தொடர்பை கொண்ட பற்தூரிகை
இணையத்தளத்துடன் தொடர்பைக் கொண்ட உலகின் முதலாவது பற்தூரிகை அமெரிக்க நெவாடா மாநிலத்தின் லாஸ் வெகாஸ் நகரில் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
இந்த கொலிபிறி பற்தூரிகையிலுள்ள உணர் கலங்கள் பற்களை துலக்கும்
போது பற்களிலுள்ள கனியுப்புப் படிமங்கள் எந்தளவுக்கு
அகற்றப்படுகின்றன என்பதை கணிப்பிடுகின்றன.
3.பூமியின் சகோதரர்!: புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு
சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின், கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'கே.ஓ.ஐ.-314' என, பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை, 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.
4. முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்திரனில் வீடுகள் நிர்மாணிக்க நாசா திட்டம்
சந்திரனில் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான கட்டமைப்பை நிர்மாணிப்பதே நாசாவின் முக்கிய இலக்காக உள்ளது.
இந்நிலையில் மேற்படி முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை விருத்தி
செய்வதற்கு அமெரிக்கா தென் கலிபோனியா பல்கலைக்கழகத்திற்கு நாசா தற்போது
நிதியுதவி அளித்துள்ளது.
அமைப்புக் கைவினைத்திறன் என அழைக்கப்படும் இந்த செயற்கிரமம் சந்திரனின்
மேற்பரப்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பில் கொங்கிறீட் அல்லது
ஏனைய மூலப் பொருட்களை பயன்படுத்தி வீடுகளை அமைப்பதே நோக்காகக் கொண்டது.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சில பாகங்கள் பூமியில் உருவாக்கப்பட்டு
ஏவுகணையொன்றின் மூலம் சந்திரனுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான 90 சதவீத மூலப்பொருட்கள் ஏற்கனவே சந்திரனில் உள்ளதாக கூறப்படுகின்றது.
மேற்படி புதிய வீடமைப்பு முறைமையைப் பயன்படுத்தி அனர்த்த வலயங்களிலும்
சேரிப்பகுதிகளிலும் இலகுவாக வீடுகளை நிர்மாணிக்க முடியும் என தென்
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஹ்ரோன் கொஷ்ருனவிஸ்
தெரிவித்தார்.
5.செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதிய விண்கலம்
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் அதிக எடையைத் தாங்கிச் செல்லும் புதிய விண்கலம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ளது.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வேலைகளைத் தொடங்கியுள்ளது நாசா. மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் அதிக எடை தாங்கும் வகையில் இந்தப் புதிய விண்கலம் தயார் செய்யப் பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த விண்கலம் 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு
நடைபெற உள்ள இதன் முதல் சோதனை ஓட்டத்தில், இது விண்வெளிக்கு 130 டன்
எடையுள்ள பொருட்களை தாங்கிச்செல்லும் என நம்பப்படுகிறது.
புதிய விண்கலம்
மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய்
கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம்
அமைக்கப்பட்டுள்ளது.
தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை
சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் என விஞ்ஞானிகள்
நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
6.செவ்வாய்கிரகத்தில் பூத்து குழுங்கும் தாவரங்கள்
செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
டச்சு பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.அவர் கூறி இருப்பதாவது,
செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது .
.இந்த சோதனை 50 நாட்கள்
நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில்
வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட்
இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. மொத்தம் 840
பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.
இது பொல்ல் அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது.
7.ஆழ்கடலில் சுவாசிப்பதற்கு உதவும் உபகரணம்
மீன்களைப் போன்று நீரிலிருந்து ஒட்சிசன் வாயுவை பெற்று சுவாசிக்க உதவும் முகமூடி உபகரணமொன்றை தென் கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
மீன்களின் சுவாசக் கட்டமைப்பு போன்று செயற்படும் இந்த 'திரைட்டன்' என அழைக்கப்படும் உபகரணம், ஆழ்கடலில் ஒட்சிசன் கொள்கலனின் உதவியின்றி நீரிலிருந்தே ஒட்சிசனைப் பெற்று சுவாசிக்க வழிவகை செய்கிறது.
ஜியபையுன் யியோன் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்திலுள்ள நுண் காற்றழுத்தக் கருவிகள் கடல் நீரிலிருந்து ஒட்சிசனை வேறுபிரித்து அகத்துறிஞ்சி பயன்பாட்டாளருக்கு வழங்குகின்றன.அத்துடன், இந்த கருவிகள் தேவைக்கு மேலதிகமாக தம்மால் அகத்துறிஞ்சப்படும் ஒட்சிசனை அந்த உபகரணத்துடன் இணைக்கப்பட்ட சிறிய தாங்கியில் சேமிக்கின்றன.
மேற்படி உபகரணம் வழமையான மின்னேற்ற பற்றரிகளிலும் பார்க்க 30 மடங்கு சிறிய நுண் பற்றரியால் சக்தியூட்டப்பட்டு செயற்படுகின்றது.
எனினும், இந்த கண்டுப்பிடிப்பு முழுமை பெற்று பாவனைக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு சிறிது காலம் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
8.வாத்துக்குஞ்சுக்கு செயற்கை கால் பொருத்திய முப்பரிமாண தொழில்நுட்பம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள காலொன்றை இழந்த 5 மாத வயதான வாத்துக் குஞ்கு ஒன்றிற்கு முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகரக்கூடிய பிளாஸ்ரிக் கால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.தற்போது மேற்படி வாத்து இயல்பாக நடமாடவும் தன்னை விட 10 மடங்கு பெரிய பறவைகளின் பாரத்தை தாங்கியவாறு நிற்கவும் கூடிய வல்லமையைப் பெற்றுள்ளது.
9.மணிக்கு 19 மைல் வேகத்தில் பயணிக்கும் இராட்சத ரோபோவை உருவாக்கும் கனேடிய பொறியியலாளர்கள்
ஹொலிவூட் திரைப்படமான அவதாரில் வருவதையொத்த அச்சமூட்டும் இராட்சத
உயர் தொழில்நுட்ப ரோபோ இயந்திரமொன்றை உருவாக்கும் முயற்சியில்
கனடாவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புரொஸ்தீஸிஸ் என்றழைக்கப்படும் இந்த ரோபோ மனிதனால் மனிதனுக்காக
உருவாக்கப்படும் உன்னத படைப்பென அதனை உருவாக்கி வரும் கனடாவின்
வான்கூவரைச் சேர்ந்த பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடின வெளிப்புற கட்டமைப்பைக் கொண்ட 16 அடி உயரமான இந்த ரோபோவை
அதிலுள்ள அறைக் கட்டமைப்பில் அமர்ந்துள்ள மனிதர் ஒருவர், தனது உடல்
அசைவால் கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
7,500 இறாத்தல் நிறையுடைய இந்த ரோபோ மணிக்கு 19 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
பொறியியலாளர்கள் ஏற்கனவே மேற்படி ரோபோ இயந்திரத்தின் செயற்றிறன் மிக்க கால் பகுதியை வெற்றிகரமாக உருவாக் கியுள்ளனர்.10 . ஒருவர் மற்றவர் கண்களிடனூடாக உலகைக் காண்பதற்கு உதவும் உபகரணம்.
ஒருவர் மற்றவர் கண்களிடனூடாக உலகைக் காண்பதற்கு உதவும் புதிய தொழில்நுட்ப உபகரணமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலுள்ள பிஎனதர் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த நிபுணர்களால் இந்த உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீ காணும் யாவும் நான் காண வேண்டும் என விரும்பும் காதல் ஜோடிகளுக்கு ஒருவர் காண்பதை மற்றவர் காணும் அனுபவத்தை வழங்கும் முகமாக தலையில் அணியக்கூடிய இந்த ஒகுலஸ் றிப்ட் தலைக்கவச உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஒரு ஜோடி உபகரணங்களில் முதலாவது உபகரணத்திற்குள் அமைக்கப்பட்ட புகைப்படக்கருவி மற்றைய இரண்டாவது உபகரணத்துடன் இணைப்பைக் கொண்டுள்ள அதேசமயம், இரண்டாவது உபகரணத்திலுள்ள புகைப்படக்கருவி முதலாவது உபகரணத்துடன் இணைப்பைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் ஒருவர் காண்பதை மற்றவர் காண்பது சாத்தியமாகிறது.
பாவனையாளரது இருதய துடிப்பால் சக்தியூட்டப்பட்டு
செயற்படக்கூடிய பொருத்தக் கூடிய பற்றரியொன்றை விஞ்ஞானிகள்
அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேற்படி பற்றரியானது எதிர்கால கையடக்கத்தொலைபேசிகளுக்கு சக்தியூட்டுவதற்கு மின்னேற்றி உபகரணங்களை (சார்ஜர்)எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குவதாக அமைகிறது.
அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பற்றரி இருதயம், நுரையீரல் மற்றும் பிரிமென்றகடு போன்ற உறுப்புகளின் தொடர்ச்சியான அசைவை மின் சக்தியாக மாற்றுகிறது.
ஏற்கனவே இத்தகைய பற்றரி இதய இயக்க உபகரணமொன்றுக்கு சக்தியூட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேற்படி பற்றரியை எதிர்காலத்தில் பலதரப்பட்ட கையடக்க
தொலைபேசிகளுக்கும் சக்தியூட்ட பயன் படுத்துவதற்கு விஞ்ஞானிகள் திட்ட
மிட்டுள்ளனர்.
11.கையடக்கத் தொலைபேசிகளுக்கு இருதய துடிப்பின் மூலம் சக்தி
மேற்படி பற்றரியானது எதிர்கால கையடக்கத்தொலைபேசிகளுக்கு சக்தியூட்டுவதற்கு மின்னேற்றி உபகரணங்களை (சார்ஜர்)எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குவதாக அமைகிறது.
அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பற்றரி இருதயம், நுரையீரல் மற்றும் பிரிமென்றகடு போன்ற உறுப்புகளின் தொடர்ச்சியான அசைவை மின் சக்தியாக மாற்றுகிறது.
ஏற்கனவே இத்தகைய பற்றரி இதய இயக்க உபகரணமொன்றுக்கு சக்தியூட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறிய நெகிழ்ச்சித்தன்மையுள்ள பற்றரியை பசுக்களில்
பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அது இருதய இயக்க உபகரணமொன்றை
செயற்படுத்துவதற்கு தேவையான அளவு சக்தியைக் கொண்டிருப்பது
கண்டறியப்பட்டது.
இந் நிலையில் மேற்படி பற்றரியை எதிர்காலத்தில் பலதரப்பட்ட கையடக்க
தொலைபேசிகளுக்கும் சக்தியூட்ட பயன் படுத்துவதற்கு விஞ்ஞானிகள் திட்ட
மிட்டுள்ளனர்.12. முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்நுட்பம்
தென் கொரியாவானது முழுமையான திரைப்படமொன்றை ஒரு செக்கனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய 5 ஆம் தலைமுறை கையடக்கத் தொலைபேசி இணையத்தள சேவையை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி '5 ஜி' என்ற ஐந்தாம் தலைமுறை கையடக்கத்
தொலைபேசி சேவைகளில் 900 மில்லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முதலீடு
செய்துள்ளது.
இந்த சேவையை பரீட்சார்த்தமாக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும்
அதனை 2020 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வர்த்தக ரீதியாக
செயற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி தொழில்நுட்பமானது ஒரு செக்கனில் 800 மெகா பைட் அளவான
திரைப்பட கோப்பை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்பாட்டாளருக்கு
அனுமதிக்கிறது.
இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.
தொடரும்.................
No comments:
Post a Comment